25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


 சினிமாவை விட்டு விலகி குன்னூரில் குடியேற  ஆசைப்படும்  நடிகர் அமீர்கான்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

 சினிமாவை விட்டு விலகி குன்னூரில் குடியேற  ஆசைப்படும்  நடிகர் அமீர்கான்

பாலிவுட் திரையுலகில் உச்சநட்சத்திரமாக வலம் வருபவர் அமீர்கான். இவர் நடிப்பில் கடைசியாக லால் சிங் சத்தா என்கிற திரைப்படம் ரிலீஸ் ஆனது. கடந்த2022ம்ஆண்டு திரைக்கு வந்த இப்படம் பாரஸ்ட் கோம்ப் என்கிற ஹாலிவுட் படத்தை தழுவி எடுக்கப்பட்டு இருந்தது. இதில் நாக சைதன்யாவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் ரிலீஸ் ஆன இப்படம் பாக்ஸ் ஆபிஸில் படு தோல்வி அடைந்தது.லால் சிங் சத்தா படத்தின் தோல்விக்கு பின்னர் சில வருடங்கள் சினிமாவில் இருந்து ரெஸ்ட் எடுக்க முடிவெடுத்த அமீர்கான் அதன்பின் எந்த படத்திலும் நடிக்க கமிட் ஆகவில்லை. இதனிடையே அண்மையில் அவரது மகள்ஐராகானின் திருமணமும் நடைபெற்றது. அதில் கோலிவுட் முதல் பாலிவுட் வரை பல்வேறு திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் கலந்துகொண்டனர்.

நடிகர் அமீர்கான் கடந்த சில மாதங்களாக சென்னையில் தான் வசித்து வந்தார். அவரது தாயார் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் சிகிச்சை எடுத்து வந்ததால் அவருக்காக சென்னையில் குடியேறினார் அமீர்கான். நடிகர் விஷ்ணு விஷாலின் வீட்டில் தான் சிலமாதங்கள் அமீர்கான் வசித்து வந்தார்.நடிகர் அமீர்கானுக்கு சொந்தமாக மும்பையின் பந்த்ரா பகுதியில் பலகோடி மதிப்பில் சொகுசு பங்களா இருந்தாலும் அவருக்கு குன்னூரில் சொந்த வீடுவாங்கி குடியேற வேண்டும் என்பது கனவாக இருக்கிறதாம். இதுகுறித்து கடந்த1994ம்ஆண்டு அளித்த பேட்டியில் மனம்விட்டு பேசி இருக்கிறார் அமீர்கான்.

அதன்படி அவர் கூறியதாவது“நான் சினிமாவில் நடிப்பதை நிறுத்திவிட்டால் என்னுடைய மனைவி ரீனா தத்தா மிகவும் சந்தோஷப்படுவார். நடிப்பதை நிறுத்திவிட்டால் என்ன செய்வீர்கள் என்கிற கேள்விக்கு பதிலளித்த அமீர் கான், குடும்பத்தினருடன் குன்னூருக்கு சென்று புது வாழ்க்கையை தொடங்குவேன் என கூறிஇருக்கிறார். மேலும் அதுவாழ்ந்த சிறந்த இடம் எனகூறி உள்ள அமீர், தான்அங்கு சொந்தமாக வீடுவாங்குவது பற்றியும் யோசித்து வருகிறேன். அதுஎன் நீண்டநாள் கனவு என்றும் தெரிவித்துள்ளார். மும்பையில் கோடிகோடியாய் சொத்து வைத்திருந்தும் நடிகர் அமீர்கான் குன்னூரில் குடியேற ஆசைப்படும் தகவல் அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது. பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகராக வலம்வரும் அமீர்கான், சினிமாவை விட்டு விலகிவிட்டு குன்னூரில் செட்டிலாக ஆசைப்படுவதாக கூறி இருக்கிறார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News